Tuesday 7 July 2015

பல்லாவரம் பகுதியில் கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவியை

தாம்பரம் - பல்லாவரம் பகுதியில் கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவியை நடுரோட்டில் வைத்து கணவன் அரிவாளால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்காதலனுடன் ஓட்டம்.
சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூர் சிவசங்கரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி உமா (வயது 27). துணிக்கடைக்கு வந்த உமாவை ரமேஷ் காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஹரிஷ் என்ற 3 வயது குழந்தை உள்ளது. இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பிரசன்னா என்ற வாலிபருடன் உமாவிற்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குழந்தையையும், கணவரையும் தவிக்க விட்டுவிட்டு வீட்டில் இருந்து ஓடிய உமா, பிரசன்னாவை 2–வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவமானம் அடைந்த ரமேஷ் குழந்தையை பார்க்க வருமாறு மனைவியை நேற்று அழைத்தார். சென்னை விமானநிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டல் வெளியே சந்திக்க வருமாறு கூறினார். உமா தனது கள்ளக்காதலன் பிரசன்னாவுடன் அங்கு வந்தார். குழந்தை ஹரிஷ், நண்பர் சாம்சன் ஆகியோருடன் அங்கு வந்த ரமேஷ் மனைவியிடம் இப்படி அவமானப்படுத்தி விட்டாயே? என்று ஆவேசத்துடன் பேசினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், மறைத்து வைத்து இருந்த அரிவாளால் உமாவை சரமாரியாக வெட்டினார். இதில் உமாவின் 2 கைகள் மற்றும் தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் ரமேஷ் மற்றும் அவரது நண்பர் சாம்சனை பிடித்து பல்லாவரம் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய உமா பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உமாவின் கணவர் ரமேஷ் மற்றும் அவரது நண்பர் சாம்சனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எரிச்சலோ எரிச்சல்! மொதல்ல நீங்க திருத்துங்க சாமிகளா....பொண்ணுங்கள பாதுகாக்கிறதப் பத்தி அப்புறம் கவலைப்படலாம்.

ஜொலிக்கும் அப்பாக்களா நீங்கள்? அணைத்துக்கொள்ளும் அன்பாய் எப்போது மாறும்?
   
இது நம் நாடு, நம் சுதந்திரம், இதெல்லாம் ஒரு அசிங்கமா?! குடிக்கிறார்கள், குடிக்கிறார்கள்.... குடிப்பதில் ஒற்றுமை